"பொய் சாட்சி"
"பொய் சாட்சி" நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் திறமையாக வாதாடினாலும் அவர்களது வழக்கை உண்மை என்று நிரூபிக்க சாட்சிகளும் (Witnesses), சாட்சியங்களும் (Exihibits) அவசியம் தேவை. வழக்கில் தீர்ப்பு சொல்லும் போதும், ஆவணங்களின் உண்மைத்தன்மையை நிரூபிக்கவும் சாட்சிகளின் முக்கியத்துவம் தேவை. "சாட்சிகள் தான் நீதிமன்றத்திற்கு கண்களும், காதும் ஆகும். யாராவது ஒருவர், சட்டப்படியும் நீதியின்படியும் சத்தியப் பிரமாணம் செய்து தான் கூறப்போவது உண்மையை மட்டும் தான் என சத்தியம் செய்து சான்று அளிக்கும்போது போது உண்மையை மட்டும் கூறவேண்டும். பொய்யானதை உண்மையென்று கூறுவதைப் பொய்ச் சான்று அளித்தல் என்கிறோம். . வாய்மொழியாகக் கொடுக்கும் வாக்குமுலத்தையன்றி எழுத்து முலமாகத் தரப்படும் வாக்குமூலங்களும் இதில் அடங்கும். நீதிமன்றங்களில் பொய் சாட்சி சொல்வது பற்றி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 191 லிருந்து 229 வரை தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதன்படி பொய் சாட்சி சொல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். பிரிவு - 195 : பொய் சாட்சி என்றால் என்ன? சட்ட விதிமுறைகளுக்கோ அல்லது உண்மைமையே பேசுவதாக தான் எடுத்துக் கொண்ட பிர