(36ஜ29.2)டிக்கெட் கட்டணத்தை தாமதமாக செலுத்திய கண்டக்டர் பணி நீக்கம்
*பயணச்சீட்டு கட்டணம் தாமதமாக* *செலுத்திய நடத்துநர் பணிநீக்கம்* *உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்* சென்னை , ஜன. 26: பயணிகளிடம் வசூலித்த கட்டணத்தை தாமதமாக நிர்வாகத்துக்கு செலுத்திய நடத்துநரை பணிநீக்கம் செய்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் (திருவண்ணாமலை) நடத்துநராக பனியாற்றியவர் சேகர். இவர், பயணிகளிடம் இருந்து வசூலித்த பயணச் சீட்டுக்கான தொகையை காலதாமதமாக அலுவலகத்தில் செலுத்தியதாக, கடந்த 2001-ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சேகர் தொடர்ந்த வழக்கை விசாரித்த வேலூர் தொழிலாளர் நீதிமன்றம், அவருக்கு மீண்டும் பணி வழங்க போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்து கழகம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு பிறப்பித்த உத்தரவில் இருப்பதாவது: பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய தொழிலாளர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருந்தாலும், அந்த அதிகாரத்தை எந்த அடிப்படையில் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த வழக்கில் எழுந்துள்ள கேள்வி. இந்தஅதிகாரத்