போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்தம்
*காலதாமதமாகும் 14வது ஊதிய ஒப்பந்தம் வேதனையில் போக்குவரத்து தொழிலாளர்கள்* 14 வது ஊதிய ஒப்பந்தமும் தாமதமாகி வருவது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களை வேதனைக்குள்ளாக்கியுள் ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் சமூகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் முறை 1977 ஆம் ஆண்டு முதல் தொடர்கிறது. ஆனால், 1998 ஆம் ஆண்டு க்கு பிறகு பெரும்பாலும் போராட்டங்களுக்கிடையே தொழிலாளர்களுக்கு திருப்திகரமற்ற நிலையிலேயே இந்த ஒப்பந்தம் முடிக்கப்படுகிறது இதனால், 2013, 2016 ஆம் ஆண்டுகளில் இந்த ஊதிய ஒப்பந்தம் காலம் வந்தபோது போராட்டம் . உச்ச கட்டத்தை எட்டியது. ஆனால், ஒப்பந்தம் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டதே தவிர, கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்ற குறை தொழிலாளர்கள் மத்தியில் நிலவுகிறது. கடந்த 2016 செப் 1ம் தேதி முதல் அமுலுக்கு வரவேண்டிய 13வது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதிலும் காலதாமதம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக அரசுடன் தொழிற்சங்கங்கள் பேச்சு வார்த்தை நடத்தின. இதில், மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல போக்குவரத்துக் தொழிலாளர்களுக்