கட்டாய பறிமுதல்கூடாது
கட்டாய பறிமுதல் கூடாது: உச்ச நீதி மன்றம் கார் போன்ற எந்த வாகனத்தையும் வாகனக் கடனில் வாங்கும் போது அதற்குரிய தவணைத் தொகைகளை சரியாகச் செலுத்திட வேண்டும். அப்படி செலுத்த முடியாத நிலையில் அதற்குரிய பொருட்களை சட்டப்படியே பறிமுதல் செய்ய வேண்டும்; வலுக்கட்டாயமான நடைமுறையை பின்பற்றக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பை நகரைச் சேர்ந்தவர் திருமதி எஸ்.விஜய லட்சுமி. அவர் ஒரு கடன் வழங்கும் தனியார் நிறுவனத்தில் வாகனத்துக்கான கடனைப் பெற்றார். ரூ.1.82 லட்சம் அளவுக்கு வாகனக் கடனை வாங்கினார். அந்தப் பணத்தை மாதம் ரூ.4,604 என்ற அளவில் 60 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால் சொன்ன படி குறித்த காலத்துக்குள் பணத்தைச் செலுத்தவில்லை. இதனால் திருமதி விஜயலட்சுமிக்கு விளக்கம் அளிக்கும் படி சட்டப்படியான நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர் அளித்திருந்த 26 வரைவோலைகளும் செல்லுபடியாகவில்லை என தனியார் நிறுவனம் கூறியிருந்தது. இந்த நிலையில் 3 நாட்களுக்குள் ரூ.1.31 லட்சத்தை செலுத்தும்படி தனியார் நிறுவனம் கெடு விதித்து இருந்தது. அவரால் பணத்தைச் செலுத்த முடியவில்லை. இதையடுத்து அவரின் கோ