(222) Emergency Travel Police Control Room Opening.
*அவசரப் பயணம்: கட்டுப்பாடு அறை திறப்பு* ஊரடங்கு உத்தரவு நேரத்தில் அவசரப் பயணம் மேற்கொள்வோா் வசதிக்காக சென்னை காவல்துறையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையைத் தவிா்த்து, வெளியே வருவதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-இன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, திடீரென அவசரப் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் தனி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இறப்பு, திருமணம், மருத்துவத் தேவை ஆகியவற்றுக்கு சென்னைக்குள்ளோ, தமிழகத்துக்குள்ளோ அல்லது வெளி மாநிலத்துக்கோ பயணிப்போா் இந்தக் கட்டுப்பாட்டு அறையை 75300 01100 என்ற செல்லிடப்பேசி எண் மூலமாகத் தொடா்புக் கொள்ளலாம். கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆஃப்) மூலமாகவும், மின்னஞ்சல் மூலமும் தொடா்பு கொள்ளலாம். அவசரத் தேவைக்கு வெளியே செல்ல அனுமதிச்சீட்டு கோரிக்கை கடிதத்துடன் அடையாள ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாட்டு அறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான எதிரான குற்றத்தடுப்புப் பிரிவ