இட்லி சந்தை
ஆட்டுச் சந்தை மாட்டுச் சந்தை மீன் சந்தை சந்தை காய்கறி சந்தை என பல சந்தைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் இட்லிக்கு ஒரு சந்தை இருப்பதே பெரும்பாலோருக்கு தெரிய வாய்ப்பு இல்லை இது ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் சத்தமில்லாமல் இந்த சந்தை இயங்கி வருகிறது. சந்தை யில் நாளொன்றுக்கு 20 ஆயிரம் இட்லிகள் தயாராகிறது.ஸ்பெஷல் ஆர்டர் என்றால் இட்லி விற்பனை பல லட்சங்களை தொடும் .மனித இனம் பரிணாம வளர்ச்சி அடைந்தது போல அவர்கள் உண்ணும் உணவுப் பொருட்களும் காலத்திற்கேற்ற மாற்றம் அடைந்து வருகிறது சாதாரண உணவு வகைகளும் மறைந்து இன்று சைனீஸ் பாஸ்ட்புட் என எவ்வளவோ மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன ஆனால் என்னதான் மாற்றங்கள் வந்தாலும் தென்னிந்தியாவில் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரு உணவுப் பொருள் உண்டு என்றால் அது இட்லி தான்.வெளிநாட்டு அன்பர்கள் இந்தியா வந்தாலும் மிகவும் கேட்டு வாங்கி சாப்பிடுவது இட்லியைக் தான் நம் தமிழ் நாட்டவர்களும் வெளிநாடு சென்றாலும் தேடிப்பிடித்து வாங்கி சாப்பிடுவதும் இட்லியை தான். குழந்தைகள் முதல் பாட்டி வரை அனைவரின் விருப்ப உணவாக இருப்பதும் இட்லி அந்த அளவுக்கு அனைவருக்கும் ப